muelangovan எழுதியவை | மே 23, 2008

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் 39 ஆம் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39 ஆம் கருத்தரங்கம் நடைபெறும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வாயிலை 17.05.2008 காலை 8.30 மணிக்கு அடைந்தேன்.சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு திருவள்ளுவர் விடுதியில் தங்க இடம் ஒதுக்கினர்.நான் தங்கும் அறைக்கு எதிரில் என் பேராசிரியர்அ.அறிவுநம்பி அவர்கள் பேராசிரியர் சு.இராசாராம் (அழகப்பா பல்கலை) அவர்களுடன் தங்கியிருந்தார்.வணங்கி மகிழ்ந்தேன்.

காலைக் கடமைகளை முடித்து உணவுக்கூடம் சென்று உண்டேன்.கருத்தரங்க வாயிலை அடைந்தபொழுது நண்பர் பேராசிரியர் மு.பரமசிவம்(புத்ரா பல்கலைக்கழகம்,மலேசியா) அவர்கள் வந்திருந்தார்.மலேசிய இலக்கியப்போக்குகள்,நண்பர்கள் பற்றி உரையாடினோம்.

தொடக்கவிழா வழக்கம் போல் காலத் தாழ்ச்சியுடன் தொடங்கியது.துணைவேந்ததர் திருவாசகம்,நடுவண் அமைச்சர் வழக்கறிஞர் வேங்கடபதி ஆகியோர் தமிழ் உணர்வு சார்ந்து உரையாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.தமிழச்சி அவர்கள் உரையாற்றியமையும் சிறப்பாக இருந்தது.

பல்வேறு அறிஞர்களின் பேச்சுகளுக்கு இடையில் கருத்தரங்க மலர்வெளியீடு,சிறப்புச்செய்தல் நிகழ்வுகள் நடந்தன.இரண்டுமணிவரை தொடக்கவிழா நீண்டது.பகலுணவுக்குப் பிறகு தமிழ்த்துறையில் கருத்தரங்க அமர்வுகள் நடந்தன.இணைய உலகில் தமிழ்நூல்கள் என்னும் தலைப்பில் நான் கட்டுரை படித்தேன்.நல்ல வரவேற்பு.இணையம் சார்ந்த மூன்று கட்டுரைகள் படித்தோம்.பிற கட்டுரைகள் வழக்கம்போல் இருந்தன.

பேராசிரியர் சபாபதி(மலேசியப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முத்தையா(மேற்கு வங்காளம்-விசுவபாரதி பல்கலைக்கழகம்),பேராசிரியர் கோவி. இராசகோபால்(தில்லிப் பல்கலைக்கழகம்) நண்பர் சு.தமிழ்வேலு உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன்.இரவு உணவு புலால் வகையில் சிறப்பு.நீண்டநேரம் பேராசிரியர் பரமசிவம் பேசி மகிழ்வித்தார். முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் தமிழ்ப் பணிகளை அசைபோட்டோம்.

மேலும் சில நண்பர்களைக் கண்டு உரையாடி இரவு படுத்து, மறுநாள் வைகறையில் எழ நினைத்து, அயர்ந்து தூங்கி, காலையில் காலம் தாழ்ந்து எழுந்தேன்.உடன் புறப்பட்டு கோவைப் பேருந்து நிலையம் வந்தேன்.ஈரோட்டுக்குப் பேருந்தேறி காலை 11 மணியளவில் சக்தி துரைசாமி திருமணமாளிகை சென்றேன்.

பேராசிரியர் கனல் மைந்தன் இளையமகனின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தேன். எழுத்தாளர் ஞானி.ஓவியர் வீரசந்தானம்,பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்,வழக்கறிஞர் முருகன் ஆகியோரைக் கண்டு அளவளாவினேன்.பலரைக் கண்டு மகிழ்ந்தாலும் திட்டமிட்டபடி சிலரைச் சந்திக்கமுடியாமல் போனது.பிற்பகல் பேருந்தேறி இரவு 10 30 மணியளவில் புதுச்சேரி வந்தேன்.வீரசந்தானம் அவர்களுடன் நன்கு பழக நல்ல வாய்ப்பு.


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்